சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Wednesday, August 09, 2006

பாடல் 54 - இளநீர்

தென்னை மரத்து இளநீரூ -நல்ல
தேன்போல இனிக்கும் சுவைநீரு
என்றும் எங்கும் கிடைத்திடுமே -தினம்
ஏற்றுக் குடித்தால் நலம் தருமே!

பானத்தில் இளநீர் அரியவகை -எந்த
காலமும் நமக்கு நல்ல துணை
விலையோ ஒன்றும் அதிகமில்லை -இங்கு
இதுபோல் பானம் வேறு இல்லை.

இயற்கை தந்தது இளநீரு -நல்ல
இன்சுவை தந்திடும் இளநீரு
உடலின் வெப்பம் தணித்திடுமே -நம்
உள்ளம் தனிலே நிறைந்திடுமே!

கொத்துக் கொத்தாய் காய்த்திடுமே -நம்
அனைவரின் தாகம் தீர்த்திடுமே!
அனைவரும் நாளும் குடித்திடலாம் -வரும்
ஆனந்தம் தனிலே திளைத்திடலாம்!

நன்றி: முத்தமிழ்மன்றம்

0 Comments:

Post a Comment

<< Home